சென்னை: சென்னை மாநகராட்சி சொத்து வரியை உயர்த்த, ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழு 30 நாட்களில் தமிழக அரசுக்கு அறிக்கை அளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சொத்துவரிக்கு விதிகளை வகுக்க வி.பி.ஆர்.மேனன் தொடர்ந்த வழக்கில் சொத்துவரி உயர்த்துவது குறித்து ஆய்வு செய்யும் குழுவுக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.