கிங்ஸ்டன்: மேற்கிந்திய தீவுகள் அணியின் வீரர் ஓஷானே தாமஸ் கார் விபத்தில் சிக்கியதால், அவருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது. மேற்கிந்திய தீவுகள் வீரர்களில் அசோசியேஷன் தகவல்படி, செயின்ட் கேத்தரினில் உள்ள ஓல்ட் ஹார்பர் அருகே காரில் சென்றபோது இரண்டு வாகனங்கள் மோதியதில் தாமசுக்கு காயம் ஏற்பட்டது. தீவிர சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதால், ஜமைக்கா வேகப்பந்து வீச்சாளரின் வீட்டில் ஓய்வில் இருப்பதாக தாமசின் உதவியாளர் கூறினார்.
தாமஸ் கடைசியாக மேற்கிந்திய தீவுகள் அணிக்காக கடந்த மாதம் அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் விளையாடினார்.