ஹைதராபாத் : ஹைதராபாத்தில் வசிக்கும் 127 பேர் குடியுரிமையை நிரூபிக்கும் படி ஆதார் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி இருப்பதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்து உள்ளது.போலிச் சான்றிதழ்கள் மூலம் ஆதார் அட்டை பெற்றதாக கூறி 127 பேருக்கு ஆதார் அமைப்பு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில் உரிய ஆதாரங்களுடன் மே மாதத்திற்குள் நேரில் ஆஜராகி தங்களது குடியுரிமையை நிரூபிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் குடியுரிமையை நிரூபிக்க ஆஜராகாத பட்சத்தில் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.