டெல்லி: டெல்லியில் திமுக தலைமையில் தமிழக எதிர்க்கட்சியினர் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை நேரில் சந்தித்து, குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான கையெழுத்து பிரதிகளை வழங்கினர். சிஏஏவுக்கு எதிராக இஸ்லாமிய அமைப்புகளும், மாணவ அமைப்புகளும் போராடி வருகின்றன. தொடர்ந்து, சட்டமன்றத்தில் சிஏஏ-வுக்கு எதிராக தீர்மானம் கொண்டுவர வேண்டும் என எதிர்கட்சிகள் முழக்கமிட்டன. ஆனால் அதற்கான மறுப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில், திமுக வெளிநடப்பு செய்தது. இந்நிலையில் டெல்லியில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து திமுக கையெழுத்து பிரதிகள் ஒப்படைக்கப்பட்டது. சிஏஏவுக்கு எதிரான கையெழுத்து பிரதிகளுடன் திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகளின் தலைவர்கள், குடியரசுத் தலைவருடன் சந்தித்து பேசினர். அப்போது குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு எதிராக 2 கோடி பேர் கையெழுத்திட்ட கையெழுத்து பிரதிகள் குடியரசுத் தலைவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
டெல்லியில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்துடன் தமிழக எதிர்க்கட்சி தலைவர்கள் சந்திப்பு: சிஏஏ-வுக்கு எதிரான 2 கோடி கையெழுத்து நகல் ஒப்படைப்பு!
- எதிர்க்கட்சித் தலைவர்கள்
- ராம்நாத் கோவிந்த்
- தில்லி
- தமிழ்நாடு
- ஜனாதிபதி
- குடியரசுக்
- எதிர்க்கட்சித் தலைவர்கள் சந்திக்கின்றனர்