குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான இஸ்லாமிய அமைப்பினரின் போராட்டம் நிறைவு

சென்னை: சென்னை சேப்பாக்கத்தில் சிஏஏவுக்கு எதிரான இஸ்லாமியர்களின் போராட்டம் நிறைவுப்பெற்றது. சட்டமன்றத்தை முற்றுகையிட உயர்நீதிமன்றம் தடை விதித்ததால் இஸ்லாமியர்கள் கலைந்து செல்கின்றனர். குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான இஸ்லாமிய அமைப்பினரின் போராட்டம் நிறைவடைந்தது நீதிமன்றம் தடை வித்திருப்பதால் சட்டப்பேரவையை முற்றுகையிட செல்லவில்லை என தெரிவித்தனர். அடையாள அட்டை , தேசிய கொடியுடன் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கோஷமிட்டபடி இஸ்லாமியர்கள் பேரணியாக சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அந்த போராட்டம் தற்போது நிறைவு பெற்று உள்ளது. சட்டமன்றத்தை முற்றுகையிட  சென்னை ஐகோர்ட் தடைவிதித்து இருப்பதால்  பேரணி சேப்பாகம் வரை பேரணி சென்று  அங்கு போராட்டத்தை முடித்தனர். சுமார் 2 மணி நேரம் இந்த போராட்டம் நடைபெற்றது. பேரணியில் பங்கேற்க வந்தவர்கள் அமைதியாக கலைந்து செல்கின்றனர்.

Related Stories: