பேச மறுத்ததால் வீட்டுக்கு வந்து தகராறு செய்த கள்ளக்காதலியின் தாய் குத்திக்கொலை : கம்பெனி ஊழியர் கைது

தண்டையார்பேட்டை:  புதுவண்ணாரப்பேட்டை, ஜீவா நகர், மெயின் தெருவை சேர்ந்தவர் சந்திரசேகர் (40), தனியார் கம்பெனி ஊழியர். இவரது மனைவி யுவராணி (35). இவர்களது மகன் சஞ்சய். கருத்து வேறுபாடு காரணமாக சில ஆண்டுக்கு முன்பு கணவனை பிரிந்த யுவராணி, செங்கல்பட்டில் உள்ள தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். இந்நிலையில், அதே பகுதியில் கணவனை பிரிந்து வசித்து வரும் தனலட்சுமி (37) என்பவருக்கும், சந்திரசேகருக்கும் 2 வருடங்களாக கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இதனிடையே பாலியல் வழக்கில் தனலட்சுமியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சிறையில் இருந்து வெளியில் வந்த தனலட்சுமி, சந்திரசேகருக்கு ேபான் செய்தார். அவர் போனை எடுக்காததால், தனலட்சுமி, அவரது தாய் ரத்னாவதி (எ) ரத்னா (58) மற்றும் தனலட்சுமியின் மகள் ஷாலினி  ஆகியோர் நேற்று சந்திரசேகர் வீட்டுக்கு சென்று தகராறு செய்து, அங்கிருந்த சந்திரசேகரின் வேன் கண்ணாடியை நொறுக்கினர். ஆத்திரமடைந்த சந்திரசேகர், கத்தியை  எடுத்து வந்து ரத்தினத்தின் வயிற்றில் குத்தினார். இதில்  ரத்னா அதே இடத்தில் இறந்தார். தடுக்க முயன்ற தனலட்சுமி, ஷாலினியின் கைகளிலும் கத்திக்குத்து  விழுந்தது. புதுவண்ணாரப்பேட்டை போலீசார் வந்து, ரத்னா உடலை பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பினர். காயமடைந்தவர்களை அதே  மருத்துவமனையில் சேர்த்தனர். வழக்குப்பதிவு செய்து சந்திரசேகரை  கைது செய்தனர்.

Related Stories: