புழல்: புழல் ஏரியில் மிதந்த ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சடலத்தை கைப்பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர். செங்குன்றம் பாதுகாப்பு அலுவலர்கள் குடியிருப்பு அலுவலகம் பின்புறம், புழல் ஏரியில் ஆண் சடலம் மிதப்பதாக நேற்று காலை செங்குன்றம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் விரைந்து வந்து பார்த்தபோது, சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.