×

வாலிபர் அடித்து கொலை வழக்கில் கட்டிட தொழிலாளிகளை தேடி தனிப்படை ஒடிசா விரைவு

வேளச்சேரி: பள்ளிக்கரணை அடுத்த பெரும்பாக்கம்  சவுமியா நகர் 3வது தெருவில் உள்ள பூங்கா அருகே, நேற்று முன்தினம் சுமார் 40 வயது மதிக்கத்தக்க வாலிபர் உடலில் காயங்களுடன் இறந்து கிடந்தார். இதுகுறித்து பள்ளிக்கரணை போலீசார் விசாரணை நடத்தினர். இதில், பூங்கா அரு கே ஒரு வீடு கட்டும் பணி நடந்து வருகிறது. அங்கு கட்டுமான பணியில் ஆந்திரா, மேற்கு வங்காளம், திருவண்ணாமலை போன்ற பகுதியை சேர்ந்த 6 பேர் தங்கி வேலை செய்தனர். இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகு தலைமையில் 2 தனிப்படைகள் அமைத்து தீவிரமாக விசாரித்தனர்.  

அதில், கட்டிடத்திற்கு மேற்பார்வையாளராக இருந்த ஜல்லடியன்பேட்டையை சேர்ந்த பாண்டியன் (39) என்பவரை பிடித்து விசாரித்தனர். இதில், அவர்கள் தங்கியிருந்த இடத்தில் அடிக்கடி செல்போன் திருடு போயுள்ளது.திருடனை பிடிக்க காத்திருந்தபோது, அங்கு வந்த வாலிபரை திருடன் எனக்கருதி கட்டிட தொழிலாளிகள் தாக்கினர். மயங்கி விழுந்ததால் பூங்கா அருகே போட்டி விட்டனர் என்றார்.  ஒடிசா தப்பி சென்று இருக்கலாம் என கருதி தனிப்படையினர் ஒடிசா சென்றுள்ளனர்.

Tags : STF Odisha ,search , STF Odisha quick , building workers
× RELATED கந்தர்வகோட்டை அருகே குரும்பூண்டி...