வாட்ஸ்அப்பில் ‘காதல் தோல்வி’ ஸ்டேட்டஸ் பதிவிட்டு ஆட்டோ மீது பைக் மோதி வாலிபர் தற்கொலை?

திருமலை: தெலங்கானா மாநிலம் ராஜம்பேட்டையை சேர்ந்தவர் வெங்கட்,  இவரது மகன் பிரதீப்(19). அதே பகுதியில் உள்ள மதுக்கடையில் பணிபுரிந்து  வந்தார்.       நேற்று முன்தினம் பிரதீப் தன்னுடன் பணிபுரியும் நண்பருடன் சேர்ந்து வேமுலவாடா பகுதிக்கு பைக்கில் சென்றார். பின்னர் வேமுலவாடாவிலிருந்து பிரதீப் மட்டும் தனியாக பைக்கில் வீட்டிற்கு சென்றார். உக்ரவாயி பகுதியில் உள்ள சாய்பாபா கோயில் அருகே சென்றபோது பைக், ஆட்டோ மீது மோதியது. இதில் தூக்கிவீசப்பட்ட பிரதீப் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.  இதுகுறித்து தகவலறிந்த காமாரெட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக காமாரெட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அதில் பிரதீப், இறப்பதற்கு ஒரு மணிநேரத்திற்கு முன், பைக்கில் சென்றபடி ‘காதலில் தோல்வி அடைந்து விட்டேன்’’ எனக்கூறியபடி செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். அந்த வீடியோவை வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டசாக பதிவிட்டது தெரியவந்தது. எனவே பிரதீப், காதல் தோல்வியால் ஆட்டோ மீது மோதி தற்கொலை செய்து கொண்டாரா அல்லது விபத்தில் சிக்கி இறந்தாரா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: