திருவனந்தபுரம்: தயாரிப்பாளருடன் மோதல் ஏற்பட்டு நடிக்க தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், நடிகர் ஷேன் நிகாம் தற்போது மன்னிப்பு கடிதம் எழுதியுள்ளார். மலையாள சினிமாவின் முன்னணி இளம் நடிகர்களில் ஒருவர் ஷேன் நிகாம். இஷ்க், கும்பளங்கி நைட்ஸ் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். வெயில் என்ற படத்தில் நடிக்க ₹40 லட்சம் சம்பளத்தில் ஒப்பந்தம் ஆகியிருந்தார். ஆனால், ஷேன் நிகாம் அதைவிட கூடுதலாக பணம் வேண்டும் என்று கேட்டதாக தெரிகிறது. இதற்கு பட தயாரிப்பாளர் ஜோபி ஜார்ஜ் மறுத்துள்ளார். இதையடுத்து ேஷன் நிகாம் அந்த படத்துக்கு டப்பிங் பேச மறுத்துவிட்டார். இதுகுறித்து தயாரிப்பாளர் சங்கத்தில் ஜோபி ஜார்ஜ் புகார் ெசய்தார். தங்களுக்கு 3 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், படம் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் ேஜாபி ஜார்ஜ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து தயாரிப்பாளர் சங்கம், ஷேன் நிகாம் படங்களில் நடிக்க தடை விதித்தது. இதனால் ஷேன் நிகாம் தொடர்ந்து படங்களில் நடிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் நடிகர் ஷேன் நிகாம் தயாரிப்பாளர் ஜோபி ஜார்ஜுக்கு ஒரு கடிதம் அனுப்பி உள்ளார். அதில் நடந்த சம்பவத்துக்கு தான் மன்னிப்பு கேட்பதாகவும், வெயில் படத்துக்காக பேசப்பட்ட 40 லட்சத்தில் பாக்கித்தொகை 16 லட்சம் தனக்கு வேண்டாம் எனவும் கூறியுள்ளார். இதற்கு, தயாரிப்பாளர்கள் சங்கத்துடன் ஆலோசித்து முடிவு செய்யப்படும் என்று ஜோபி ஜார்ஜ் பதில் கடிதம் எழுதியுள்ளார்.