×

ஒப்பந்ததொழிலாளர்களை நிரந்தரம் செய்ய கோரி தொமுச மனு அளிப்பு

சென்னை: தமிழ்நாடு முதல்வர் தனிப்பிரிவு மற்றும் எரிசக்தி துறை செயலாளரிடம் அளித்த மனுவில், ‘தமிழக மின்வாரியத்தில் 17  ஆயிரம் கள உதவியாளர் பதவியும் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கம்பியாளர் பதவி உள்பட 47 ஆயிரத்து 817 பதவிகள் காலியாக உள்ளன. மின்வாரியத்தில் ஆட்கள் பற்றாக்குறை காரணமாக கடந்த பல ஆண்டுகளாக கம்பங்கள் நடுதல், மின்மாற்றி அமைத்தல், மின்தடை சரிசெய்தல் உள்ளிட்ட பணிகளை மின்வாரிய பிரிவு அலுவலகங்களில் பணியாற்றும் ஒப்பந்த பணியாளர்கள் செய்து வருகின்றனர். இவர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும். மேலும் கேங்மேன் பதவிக்கு தேர்தெடுக்கப்பட்டது குறித்தும் உரிய விசாரணை நடத்த வேண்டும்.

Tags : contract workers , Oppantatolilalarkalai. Petition .Compulsory Petition
× RELATED திருப்பதி மாநகராட்சியில் போலி...