சீர்காழி: நாகை மாவட்டம் சீர்காழி அருகே கொண்டல் கிராமத்தில் பழமை வாய்ந்த குமார சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளது. இந்த கோயிலில். கடந்த 16ம் தேதி நள்ளிரவு மர்ம நபர்கள், கோயில் பூட்டை கள்ளசாவி போட்டு திறந்து ₹1 கோடி மதிப்பிலான3 ஐம்பொன் சிலைகளை கொள்ளையடித்து சென்றுவிட்டனர். கோயிலில் இருந்து 50 மீட்டர் தூரத்தில் உள்ள 50 அடி ஆழம் கொண்ட சரவண பொய்கை குளத்தில் இந்த சிலைகளை கொள்ளையர் வீசி சென்று இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இதனால் 3 மின் மோட்டார்கள் மூலம் தண்ணீரை வெளியேற்றும் பணி நேற்றுமுன்தினம் துவங்கியது. 2வது நாளாக நேற்றும் தண்ணீர் இறைக்கப்பட்டு வருகிறது.