×

தண்ணீரை வெளியேற்றிவிட்டு கோயில் குளத்தில் ஐம்பொன் சிலைகள் தேடும் பணி தீவிரம்

சீர்காழி: நாகை   மாவட்டம் சீர்காழி அருகே கொண்டல் கிராமத்தில்  பழமை வாய்ந்த  குமார சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளது. இந்த  கோயிலில். கடந்த 16ம் தேதி நள்ளிரவு மர்ம  நபர்கள், கோயில் பூட்டை கள்ளசாவி போட்டு  திறந்து ₹1 கோடி மதிப்பிலான3  ஐம்பொன் சிலைகளை  கொள்ளையடித்து  சென்றுவிட்டனர். கோயிலில் இருந்து 50 மீட்டர்  தூரத்தில் உள்ள  50  அடி ஆழம் கொண்ட சரவண பொய்கை குளத்தில் இந்த சிலைகளை கொள்ளையர் வீசி சென்று இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இதனால் 3 மின் மோட்டார்கள் மூலம் தண்ணீரை   வெளியேற்றும் பணி நேற்றுமுன்தினம் துவங்கியது. 2வது நாளாக நேற்றும்  தண்ணீர் இறைக்கப்பட்டு வருகிறது.



Tags : temple pond , Water, Temple pond, Imbon statues
× RELATED கோயில் குளத்தில் செத்து மிதக்கும் மீன்கள்: பக்தர்கள் அதிர்ச்சி