பெஷாவர்: பாகிஸ்தானில் முதல் முறையாக இந்த ஆண்டு நாடு தழுவிய அளவில் போலியோ சொட்டு மருந்து வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 3.9 கோடி குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணியில் 2 லட்சம் ஊழியர்க ஈடுபட்டுள்ளனர். இவர்கள்் வீடு வீடாக சென்று 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இருக்கிறார்களா என கண்டறிந்து, சொட்டு மருந்து வழங்கி வருகின்றனர். இதற்கிடையே, தேரா இஸ்மாயில் கான் நகரில் உள்ள குலாசி பகுதியில் ஊழியர்கள் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து போட்டுக் கொண்டிருந்தனர். அங்கு பாதுகாப்புக்காக போலீசார் நின்றனர். அப்போது சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்தது. இதில், போலீஸ்காரர் ஒருவர் உயிரிழந்தார். 2 பேர் காயமடைந்தனர்.