×

குருவம்மா ஊருக்கு போறீயாமே, நான் இல்லாம எப்படி தனியா போவ?... காவலன் ஆப் விழிப்புணர்வில் கலக்குது பெரம்பலூர் போலீஸ்

பெரம்பலூர்: தமிழ்நாடு காவல்துறையால் பெண்கள் பாதுகாப்புக்காக தோற்று விக்கப்பட்டுள்ள காவலன் ஆப் குறித்தும், சாலை விப த்துகளைத் தடுக்க, உயிர்ச் சேதத்தைத் தவிர்க்க இருச க்கர வாகனங்களில் செல் லும்போது, கட்டாயம் ஹெல்மெட் அணிவது அவசியம், கார்களில் சீட்பெல்ட் அணிவது அவசியம் போன்றக் கருத்துக்களை நூதனமாக சமீபத்திய டிரெண்டைப் பயன்படுத்தி மீம்ஸ்களின் மூலம் தெரி வித்து வருகிறது. இதில் பெரம்பலூர் மாவட்டக் காவல் துறை தனது பேஸ் புக், வாட்ஸ்அப், இன்ஸ்டா ராம் ஆகியவற்றில் சினி மாப்பட பாணியில் புதுபுது மீம்ஸ்களை கிரியேட் செய் து காவலன் ஆப்குறித்தும், பெண்கள் பாதுகாப்பு மற்றும் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்தும் மக்களிடம்  விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.

இந்திய அளவில் வசூலில் வாரிக்குவித்த பாகுபலி திரைப்படத்தின் பரபர ப்பான காட்சியான, பாகுபலி தனது மனைவி தேவசேனாவின் முதுகில் கை வை த்த படைத்தளபதியை, ராஜ மாதா சிவகாமி முன்னிலையில் தலையை சீவுவது போன்ற காட்சிக்கு இணையாக, சிவகாமி என்ன நடந்தது தேவசேனா என கேட்ப தாகவும், அதற்கு பதிலளிக்கும் தேவசேனா, படைத்தளபதி பெண்களின் மேல் கை வைத்து முதுகில் தொடவந்தான். காவலன் ஆப் பை அழுத்திவிட்டேன் அதனால் பாகுபலி ரூபத்தில் காவலன் ஆப்  வந்து  தன்னை காத்தது என  பதில் கூறுவதாக அந்த மீம்ஸ் கிரியேட் செய்யப்பட்டுள்ளது.

அதேபோல் மற்றொரு மீம் சில் மன்னர் பதவி கிடைக்காத மகேந்திர பாகுபலி படைத் தளபதியாக பொறுப்பேற்கும் போது கூறுவதாக,  பாகுபலி ஆகிய நான் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்களை இயக்க மாட்டேன் என உறுதி அளிக்கிறேன் எனக் கூறுவதாகவும் அப்போது பதவி ஏற்கும் நிகழ்வைப் பார்க்கும் பொதுமக்கள் தரப்பில், தனிமனித மாற்றம், தமிழ்நாட்டின் மாற்றம்  என்றக் கருத்தை தெரிவிப்பதாக அந்த மீம்ஸ் உள்ளது. மேலும் நடிகர் வடிவே லு நடித்த சில்லுனு ஒரு கா தல்என்ற சினிமாபடத்தில் கணவன் மனைவி காமெடி காட்சியை போல், குருவம் மா என்ன விட்டுட்டு ஊரு க்கு போறியாமே என வடி வேலு கேட்பதாகவும்,

ஆமா ம் போறேன் என தெரிவிக் கும் மனைவியிடம் நான் இல்லாம தனியா எப்படி போவீங்க என வடிவேலு கேட்கும் கேள்விக்கு அவ ரது மனைவி துணிச்சலாக அது தான் பெண்களை பாதுகாக்க காவலன் ஆப் உள்ளதே அப்புறம் என்ன. இனி பிறந்த வீட்டுக்கு ம னைவி தனியாகச் செல்ல (கணவரின்) உங்கள் தயவு உள்ளம் தேவையில்லை என்பது போல் அந்த மீம்ஸ் கிரியேட் செய்யப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்ட காவல்துறையில் உள்ள  ஊடகப் பிரிவினர் இதுபோன்ற விழிப்புணர்வு மீம்ஸ்களை பொதுமக்கள், இளைஞர்கள், வாகன ஓட்டிகள் ரச னைக்கேற்ப சினிமா பட பாணியில் கிரியேட்செய்து சமூக வலைதளங்களில் பர ப்பி தெறிக்க விடுவது பெரம்பலூர்  மக்களை அதிக அளவில் ஈர்த்துள்ளது.

Tags : Guruvamma ,town , Police App, Perambalur Police
× RELATED ஆரணி டவுன் தர்மராஜா கோயில் அக்னி...