குண்டும் குழியுமாக காணப்படுகிறது உருவாட்டி சாலை... கீழே உருட்டுது ஆளை...: வாகன ஓட்டிகள் புலம்பல்

காளையார்கோவில்: காளையார்கோவில் அருகில் உருவாட்டி கிராமத்திற்கு செல்லும் ரோடு மிகவும் மோசமாக உள்ளதால் அடிக்கடி விபத்து ஏற்படுவதாக மக்கள் கூறுகின்றார்கள். காளையார்கோவிலில் இருந்து பள்ளித்தம்மம், வேம்பனி கிராமம் வழியாக உருவாட்டி, அம்மாபட்டினம் உட்பட அதனைச் சுற்றியுள்ள கிராமங்களுக்கு செல்லும் தார் ரோடு மிகவும் மோசமான நிலையில் உள்ளது. அப்பகுதியில் புகழ்பெற்ற உருவாட்டி அம்மன் கோவிலுக்கு நாள்தோறும் ஏறாளமான பொதுமக்கள் செல்வதுண்டு. மேலும் அதிகப்படியாக விவசாயம் செய்து வருகின்றார்கள்.

விளைபொருட்கள் மற்றும் இடுபொருட்களை காளையார்கோவிலுக்கு கொண்டு செல்லவும் அப்பகுதியில் உள்ள 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு செல்வதற்கும் இச்சாலையை பயன்படுத்தி வருகின்றனர். அப்பகுதியில் செல்லும் மினி பஸ் பள்ளம் மேடுகளால் அடிக்கடி பழுதாகி நின்று விடுகின்றது. இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் அடிக்கடி விபத்துக்களை சந்திக்க நேரிடுகின்றது. சில வருடங்களுக்கு முன் போடப்பட்ட தார்ச்சாலை மிகவும் மோசமாக உள்ளது. எனவே தரமான தார்ச் சாலை அமைத்து தருமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

Related Stories: