கறம்பக்குடி: கறம்பக்குடி அருகே பழுதடைந்த பேருந்து நிழற்குடையை சீரமைக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தினார். புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஊராட்சி ஒன்றியம் ஓடப்பாவிடுதி ஊராட்சி அமைந்துள்ளது இந்த ஊராட்சியில் பல்வேறு கிராமங்கள் உள்ளன இந்த கிராமத்தில் சுமார் 2000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். குறிப்பாக இந்த ஊராட்சியில் திருப்பக் கோவில் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் பொது மக்கள் மற்றும் விவசாயிகள் ,பள்ளி மாணவ மாணவிகள் நலன் கருதி கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு பேருந்து நிறுத்த நிழற் குடை புதிதாக கட்டப்பட்டு அனைத்து தரப்பு பொது மக்கள் பயன்பாட்டில் இருந்து வந்தது இந்த பேருந்து நிறுத்த நிழற்குடையை மூலம் பல்வேறு தரப்பினர் பயன்படுத்தி வந்தனர். கடந்த சில ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்த நிழற்குடை பெரிதும் பழுதடைந்து. எந்த நேரத்திலும் இடிந்து ஆபத்தை ஏற்படுத்தும் நிலையில் காணப்படுகின்றன.