சென்னை: தமிழில் படித்தால் வேலை கிடைக்காது என்ற நிலைமை தமிழகத்தில் இல்லை என்று பேரவையில் அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார். இளந்தமிழர் இலக்கிய பயிற்சிப் பட்டறையை மதுராந்தகம் aதொகுதியில் அமைக்குமாறு உறுப்பினர் புகழேந்தி கோரினார். திமுக ஆட்சியில் மாவட்டம் தோறும் கட்டுரை, கவிதைப் போட்டிகளை நடத்தியதைப் போல் அதிமுக அரசு நடத்த வலியுறுத்தினார்.