×

விலையேற்றம் தொடங்கிருச்சு : ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.88 உயர்ந்து ரூ.31,304-க்கு விற்பனை

சென்னை : சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.88 உயர்ந்து ரூ.31,304க்கு  விற்பனை செய்யப்படுகிறது. ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலை மாறிக்கொண்டு வருகிறது. அமெரிக்க டாலரின் விலையில் ஏற்படும் மாற்றமே சர்வதேச தங்கத்தின் விலையை நிர்ணயிக்கிறது. அதை பொருத்து இங்கும் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. இந்தியாவில் தங்கத்தின் விலை சர்வதேச சந்தையில் அதன் விலையை பொறுத்து மாற்றத்துக்கு உள்ளாகிறது. இந்நிலையில் ஜனவரி மாதம் முழுக்க தங்கம் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வந்த நிலையில், பிப்ரவரி மாதத்தில் ஒவ்வொரு நாளும் தங்கம் விலை ஏறுவதும், அடுத்த நாள் பெயரளவுக்கு குறைவதுமான நிலை நீடித்தது.

இந்நிலையில், இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது. இன்றைய நிலவரப்படி, ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.11 உயர்ந்து ரூ.3,913-க்கும், விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.88 உயர்ந்து ரூ.31,304-க்கு விற்பனையாகிறது.  தங்கத்தின் விலையை போல் வெள்ளியின் விலை இன்று சிறிதளவு உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை கிராமுக்கு 20காசுகள் உயர்ந்து ரூ.50.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல, ஒரு கிலோ வெள்ளியின் விலை 50,200 ரூபாயிலிருந்து 200 ரூபாய் உயர்ந்து 50,400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tags : Jewelery , Gold, Price, Jewelry, Shaving, Silver, Sales, Gr
× RELATED 3 நகை பட்டறைகளில் வருமானவரி சோதனை