துப்பாக்கியால் சுட்டாலும் போராடுவோம்: தமிமுன் அன்சாரி பேச்சு

சென்னை: துப்பாக்கியால் சுட்டாலும் நாங்கள் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து போராடுவோம் என்று மனிதநேய ஜனநாயக கட்சியின் தமிமுன் அன்சாரி பேசினார். சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தொடர்ச்சியாக 4வது நாளாக போராடிக் கொண்டிருக்கும் மக்களை மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினர் தமிமுன்  அன்சாரி சந்தித்தார்.அவர் பேசியதாவது: வீதிகளில் போராடிய மக்களின் தடுப்புகளை அகற்றிவிட்டு அவர்களே உள்ள நுழைந்து போராட்டக்காரர்களை இழுத்துப் போட உத்தரவிட்டது யார் என்ற கேள்விக்கு சட்டசபையில் முதல்வர் பதில் அளிக்கவில்லை.

துப்பாக்கியால் சுட்டாலும் நாங்கள் தொடர்ந்து போராடுவோம். நாங்கள் பிக்பாக்கெட் அடித்தோமா, கொலை செய்தோமா, கொள்ளையடித்தோமா இல்லை  ரஜினியைப் போல கந்துவட்டிக்கு பணம் கொடுத்தோமா. இது பெட்ரோல் டீசல் விலைக்கான போராட்டமல்ல குடியுரிமைக்கான மக்களின் வாழ்வுக்கான போராட்டம் என்றார்.

Related Stories: