×

திரைப்பட தொழிலாளர்களுக்கு 1000 வீடுகள்: பெப்சி அறிவிப்பு

சென்னை: சென்னையை அடுத்த பையனூரில் திரைப்பட நகரம் அமைக்க பெப்சி அமைப்புக்கு மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நிலம் வழங்கினார். இதில் திரைப்பட தொழிலாளர்களுக்கு முதல் கட்டமாக ஆயிரம் வீடுகள் கட்டப்படுகிறது. இது தொடர்பாக பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக அரசு திரைப்பட நகரம் அமைக்க ஒதுக்கி தந்த இடத்தில் தொழிலாளர்களுக்கு 6 ஆயிரம் வீடுகள் கட்டப்பட இருக்கிறது. இதில் முதல்கட்டமாக ஆயிரம் வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கு இரண்டு தனியார் கட்டுமான நிறுவனங்கள் முன்வந்துள்ளது. 500 முதல் 2000 சதுர அடிகள் வரை வீடுகள் கட்டப்படுகிறது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா இந்த மாத  இறுதியில் நடக்க இருக்கிறது. இதில் பங்கேற்க முதல்வரை அழைக்க இருக்கிறோம். இது தவிர ஸ்டுடியோ கட்ட ஒதுக்கப்பட்ட 15 ஏக்கரில் 20 ஸ்டுடியோ கட்டலாம். முதல்கட்டமாக 2 ஸ்டுடியோக்கள் கட்டப்பட்டு வருகிறது என்றார்.



Tags : homes ,houses ,film workers ,announcement ,Pepsi , Film workers, 1000 houses, Pepsi
× RELATED வருசநாடு அருகே விளை பொருட்களை கொண்டு செல்வதில் சிரமம்