ரத்ததான விருது பெற்றவர் மறைவு பேரவையில் இரங்கல்

சென்னை: அதிக ரத்ததானம் செய்து விருதுபெற்ற மறைந்த ராஜசேகரனுக்கு சட்டப்பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. சட்டப்பேரவை நேற்று காலை 10 மணிக்கு கூடியதும், மறைந்த முன்னாள் உறுப்பினர்கள் ஆர்.சாவுத்திரி அம்மாள், கே.பி.ராஜேந்திர பிரசாத் ஆகியோர் மறைவுக்கு உறுப்பினர்கள் எழுந்து நின்று இரங்கல் தெரிவித்தனர். தமிழகத்தில் தொடர்ந்து அதிக அளவில் ரத்த தானம் அளித்து விருது (குருதி மாவள்ளல்கோன்) பெற்ற பி.ஏ.கே.பி.ராஜசேகரன் கடந்த 1ம் தேதி மரணமடைந்தார். அவரது மறைவுக்கும் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்

Related Stories: