பதவியேற்று 3 ஆண்டு நிறைவு முதல்வர் எடப்பாடிக்கு வாழ்த்து

தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்று நேற்று முன்தினம் 3 ஆண்டுகள் முடிந்து, நேற்று 4வது ஆண்டு தொடங்கியது. இதையொட்டி சட்டப்பேரவை கூட்டத்துக்கு முதல்வர் எடப்பாடி நேற்று காலை 9.58 மணிக்கு வந்தபோது அனைத்து அமைச்சர்கள், அதிமுக எம்எல்ஏக்கள் எழுந்து நின்று மேஜையை தட்டி வாழ்த்து தெரிவித்தனர். பிறகு கேள்வி-பதில் நேரத்தில் பதில் அளிப்பதற்கு முன்பு அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, வேலுமணி, ஜெயகுமார், கே.பி.அன்பழகன், எம்சி.சம்பத், உடுமலை ராதாகிருஷ்ணன், விஜயபாஸ்கர், ஆர்பி.உதயகுமார் மற்றும் கேள்விகள் கேட்ட அதிமுக எம்எல்ஏக்கள் தங்களது பேச்சை தொடங்கும் முன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணைமுதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர். முதல்வர் எடப்பாடியை வாழ்த்தி பேசும்போது குடிமராமத்து நாயகன் என்றும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை ஜல்லிக்கட்டு நாயகன் என்றும் வாழ்த்தினர்.

Related Stories: