×

சீனாவில் இருந்து திரும்பி வந்தவர் புதுகை ஓட்டல் அதிபர் கொரோனாவுக்கு பலி?

அறந்தாங்கி: சீனாவிலிருந்து சொந்த ஊரான புதுக்கோட்டை வந்த ஓட்டல் அதிபர் உடல் நலக்குறைவால் பலியானார். அவர் கொரோனா பாதிப்பால் இறந்ததாக தகவல் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஆவுடையார்கோவில் கோதைமங்கலத்தை சேர்ந்தவர் சக்திகுமார்(42). இவர் சீனாவில் ஓட்டல் நடத்தி வந்தார். மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்ட அவர், சமீபத்தில் சொந்த ஊருக்கு வந்து சிகிச்சை பெற்றார். நோய் குணமாவதற்குள் சீனாவில் ஓட்டலில் ஆள் இல்லாததால் அங்கு சென்று ஓட்டலை கவனித்தார்.  இந்நிலையில் மீண்டும் அவருக்கு உடல்நலபாதிப்பு ஏற்பட்டதால் கடந்த 4ம் தேதி அவர் சொந்த ஊர் திரும்பினார். நோயால் பாதிக்கப்பட்ட அவர், மதுரை தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி கடந்த 15ம் தேதி இறந்தார்.

சீனாவிலிருந்து திரும்பியவர்களை சுகாதாரத்துறை அவரவர் வீட்டிலேயே தனிமைப்படுத்தி கண்காணித்து வந்த நிலையில், சக்திகுமார் சீனாவிலிருந்து வந்தது தெரியாமல் போனது. தற்போது அவர் கொரோனா வைரஸ் பாதிப்பால் இறந்ததாக தகவல் பரவியதால் அப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர்.
ராமேஸ்வரத்திற்கு சுற்றுலா வந்த சீனப்பெண் ஜியாஞ்சுன் (48). ெகாரோனா வைரஸ் பயத்தால் சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டார்.

Tags : China ,Coroner Chancellor Return ,Corona Kills ,Chancellor , Return , China, Chancellor, Corona kills?
× RELATED தென் சீன கடல் பகுதியில் நான்கு...