நிஜ போலீசை பார்த்து ஓட்டம் போலி எஸ்.ஐ. விபத்தில் பலி

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம், அனுப்பட்டி பகுதியை சேர்ந்தவர் அஜீத்குமார் (23). இவர் சின்னக்கரையிலிருந்து 63 வேலம்பாளையம் செல்லும் ரோட்டில் நேற்று சப்-இன்ஸ்பெக்டர் போல சீரூடை அணிந்து, வாகன ஓட்டிகளிடம் அபராதம் வசூலித்து கொண்டிருந்தார். சந்தேகம் அடைந்த சிலர் பல்லடம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.  போலீசார் அங்கு வந்தனர். போலீசாரை பார்த்த அஜீத்குமார், டூவீலரில் வேகமாக புறப்பட்டார். அதிவேகமாக சென்ற அவர் நிலை தடுமாறி முன்னால் வந்த வேன் மீது மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இது குறித்து மங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: