பண்ருட்டி: கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே காடாம்புலியூரை சேர்ந்தவர் குமரவேல் (26). இவரும், நெய்வேலி திடீர்குப்பதை சேர்ந்த ராஜேஸ்வரி(25) என்பவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இவர்களுககு இரு குழந்தைகள் உள்ளனர். காடாம்புலியூரில் வசித்து வந்த இவர்கள் கடந்த 4மாதங்களுக்கு முன் பண்ருட்டி அன்வர்ஷா நகர் 4வது தெருவில் வாடகை வீட்டில் குடியேறினர். நேற்று முன்தினம் திடீரென ராஜேஸ்வரி வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது தொடர்பாக ராஜேஸ்வரியின் தாயார் சுசிலா புகாரின்படி பண்ருட்டி போலீசார் வழக்கு பதிந்து தீவிர விசாரணையில் இறங்கினர். அதில், கணவனே மனைவியை கொன்றது தெரியவந்தது. பண்ருட்டி பேருந்து நிலையத்தில் நின்றிருந்த குமரவேலை போலீசார் கைது செய்தனர்.