ஜோகன்னஸ்பர்க்: டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளுக்கான தென் ஆப்ரிக்க கிரிக்கெட் அணிகளின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக பேப் டு பிளெஸ்ஸி அறிவித்துள்ளார்.கடந்த மாதம் ஒருநாள் போட்டிகளுக்கான கேப்டன் பதவியை ராஜினாமா செய்த டு பிளெஸ்ஸி (35 வயது), தற்போது டெஸ்ட், டி20 போட்டிகளிலும் புதிய கேப்டனுக்கு வழிவிட்டு ஒதுங்கிக்கொள்ள முடிவு செய்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் கேப்டனாகப் பொறுப்பேற்றுள்ள விக்கெட் கீப்பர்/பேட்ஸ்மேன் குவின்டன் டி காக், மூன்று வகை கிரிக்கெட்டிலும் தலைமை பொறுப்பேற்கும் வாய்ப்பு உள்ளதாக தென் ஆப்ரிக்க கிரிக்கெட் வாரியத் தகவல்கள் தெரிவிக்கின்றன.