சென்னை: கடனை திருப்பி தராதவரை கொலை செய்த வழக்கில் கார்பென்டருக்கு ஆயுள் தண்டனை விதித்து 2வது கூடுதல் செசன்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை கோட்டூர்புரம் நாயுடு தெருவை சேர்ந்தவர் சேகர். இவருக்கு மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர். இவர், கேட்டூர்புரத்தை சேர்ந்த ரவி என்பவருடன் சேர்ந்து கார்பென்டர் வேலை செய்து வந்தார்.இந்தநிலையில் சேகர், ரவியிடம் ₹2 ஆயிரம் கடன் வாங்கியுள்ளார். இதனை சில நாட்கள் கழித்து ரவி கேட்டுள்ளார். அப்போது, தன்னிடம் பணம் இல்லை, வந்ததும் கொடுத்து விடுகிறேன் என்று சேகர் தெரிவித்துள்ளார்.கடந்த 18.9.2010 அன்று மதியம் ரவி, சேகரின் வீட்டிற்கு வந்து, கொடுத்த பணத்தை திருப்பி கொடு என்று சண்டை போட்டுள்ளார். அவர் தர மறுத்ததால், இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த ரவி, உன்னை சும்மா விட மாட்டேன் என்று கூறிவிட்டு சென்றுள்ளார்.