ரயிலில் இருந்து தவறி விழுந்த சிறுவன் பலி

தாம்பரம்: திரிசூலம், வேம்புலி அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் குருசாமி. இவரது மகன் வினோத் (17). இச்சிறுவன், நேற்று காலை தாம்பரம் செல்வதற்காக திரிசூலம் ரயில் நிலையத்தில் இருந்து மின்சார ரயிலில் ஏறி தாம்பரம் நோக்கி சென்றுள்ளான்.

அப்போது படியில் நின்று பயணம் செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், பல்லாவரம் ரயில் நிலையம் அருகே ரயில் சென்றபோது, சிறுவன் ரயிலில் இருந்து எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்துள்ளான். இதில் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். தகவலறிந்த தாம்பரம் ரயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், சம்பவம் தொடர்பாக விசாரித்து வருகின்றனர்.

Related Stories: