கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்றவர் கைது

சென்னை: சேலையூர் மற்றும் கிழக்கு தாம்பரம் பகுதிகளில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்களுக்கு  கஞ்சா விற்பனை செய்து வந்த அஸ்தினாபுரம், காயத்ரி நகரை சேர்ந்த சத்தியநாராயணன் (21) என்பவரை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து 70 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

* கடனை திருப்பி தராத தகராறில் அம்பத்தூர் பத்மாவதி சீனிவாசன் நகர், காமராஜர் தெருவை சேர்ந்த மாணிக்கம் (74) என்பவரை சரமாரியாக கத்தியால் குத்திய வெங்கடேஸ்வரா நகர், திருமலை தெருவை சேர்ந்த ஞனமணி (79) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

* முகப்பேரில் வசிக்கும் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த நரேஷ்நரங் என்பவரின் வீட்டு பூட்டை உடைத்து, பீரோவில் இருந்த 15 சவரன் நகை, 125 கிராம் வெள்ளி, ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் மற்றும் சிசிடிவி கேமராவை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

Related Stories: