×

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்றவர் கைது

சென்னை: சேலையூர் மற்றும் கிழக்கு தாம்பரம் பகுதிகளில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்களுக்கு  கஞ்சா விற்பனை செய்து வந்த அஸ்தினாபுரம், காயத்ரி நகரை சேர்ந்த சத்தியநாராயணன் (21) என்பவரை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து 70 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

* கடனை திருப்பி தராத தகராறில் அம்பத்தூர் பத்மாவதி சீனிவாசன் நகர், காமராஜர் தெருவை சேர்ந்த மாணிக்கம் (74) என்பவரை சரமாரியாக கத்தியால் குத்திய வெங்கடேஸ்வரா நகர், திருமலை தெருவை சேர்ந்த ஞனமணி (79) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
* முகப்பேரில் வசிக்கும் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த நரேஷ்நரங் என்பவரின் வீட்டு பூட்டை உடைத்து, பீரோவில் இருந்த 15 சவரன் நகை, 125 கிராம் வெள்ளி, ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் மற்றும் சிசிடிவி கேமராவை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.



Tags : college students , college ,students, Man arrested ,selling ,cannabis
× RELATED ஒரே பைக்கில் சென்றபோது அடையாளம்...