புதுடெல்லி : தலைநகர் டெல்லியில் பொது இடங்களில் உள்ள பொது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் பேனர், விளம்பரங்களை அகற்ற தெற்கு டெல்லி மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொது இடங்களில் உள்ள விளம்பரங்கள் பொது மக்களின் உயிருக்கு அச்சறுத்தலாக இருப்பதுடன், இவை நகரின் அழகை கெடுக்கின்றன. இப்பிரச்னை நாடு தழுவிய ஒன்றாகும். இதை தாமாகவே முன்வந்து வழக்காக எடுத்து கொண்ட உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி டி என் படேல், நீதிபதி சி ஹரி சங்கர் தலைமையிலான அமர்வு தெற்கு டெல்லி மாநகராட்சிக்கு நேற்று சில அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. பொது இடங்களிலுள்ள சட்ட விரோத விளம்பரங்கள், பேனர்களை அகற்ற வேண்டும்.
பொது இடங்களில் உள்ள பேனர்களை அகற்ற வேண்டும் : தெற்கு டெல்லி மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
- அகற்றுதல்
- இடங்கள்
- உயர் நீதிமன்றம்
- அகற்றும் பொது இடங்களின் தென் டெல்லி கார்ப்பரேஷன் பதாகைகள்: தென் டெல்லி கார்ப்பரேஷனுக்கான உயர் நீதிமன்ற உத்தரவு