புதுடெல்லி: வாசனை திரவிய கேன்களுக்குள் மறைத்து 42 லட்சத்துக்கும் மேற்பட்ட வெளிநாட்டு கரன்சிகளை கடத்த முயன்ற நபரை இந்திராகாந்தி விமான நிலைய பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். பழைய டெல்லியை சேர்ந்தவர் முகமது அர்ஷ். இவர் துபாய் செல்வதற்காக ஏர் இந்தியா விமானத்தை பிடிப்பதற்கு ஐஜிஐ விமான நிலையம் வந்தார். அவரது நடவடிக்கைகள் சந்தேகத்திற்கு இடமான வகையில் இருந்ததால், மத்திய தொழில் பாதுகாப்பு படையினர்(சிஐஎஸ்எப்) அவரை மடக்கி சோதனையிட்டனர்.