புதுச்சேரி: வீராம்பட்டினம் கடற்கரையில் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் பாய்மர படகு கட்டுமான பணி நடந்து வருகிறது. இதுபோல், அரிக்கன்மேடு மாதிரியும் வடிவமைக்கப்பட்டுள்ளது. புதுவையில் சுற்றுலாவை மேம்படுத்த பல்வேறு திட்டங்களை அரசின் சுற்றுலாத்துறை செயல்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக வீராம்பட்டினத்தில் அரிக்கன்மேடு காட்சியம் மற்றும் ரோமன் நாட்டு கப்பல் போக்குவரத்தை நினைவுபடுத்தும் வகையில் பாய்மர படகு அமைக்கும் திட்டம் ஜூன் மாதம் தொடங்கப்பட்டது. இப்பணி ஒருசில மாதங்கள் தொய்வு ஏற்பட்டிருந்த நிலையில் மீண்டும் இப்பணிகள் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகின்றன.