சேதுபாவாசத்திரம்: தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் மீன்பிடித் துறைமுகம் அருகே நேற்று மாலை அரியவகை கடல்பசு இறந்த நிலையில் கரை ஒதுங்கியது. இதுகுறித்து இப்பகுதி மீனவர்கள் பட்டுக்கோட்டை வனத்துறை அலுவலர்களுக்கு தகவல் அளித்தனர். மாவட்ட வன அலுவலர் குருசாமி உத்தரவின் பேரில், பட்டுக்கோட்டை வனச்சரக அலுவலர் இக்பால், வனவர் ராமதாஸ், கடலோர பாதுகாப்புக் குழும உதவி ஆய்வாளர் சுப்பிரமணியன், தலைமைக் காவலர் கோபால், இந்திய வன உயிர் நிறுவன ஆராய்ச்சியாளர்கள் அங்கு சென்று, இறந்து கிடந்த அரிய வகை கடல்பசுவை மீட்டனர்.