சென்னை: என்.பி.ஆருக்கு எதிராக மக்களைத் திரட்டி காந்தி வழியில் ஒத்துழையாமை இயக்கம் நடத்தப்படும் என திமுக மாவட்ட செயலாளர் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் ஒட்டுமொத்த பணி நியமனங்கள் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். ஹைட்ரோகார்பன் திட்டங்களை ரத்து செய்து சிறப்பு வேளாண் மண்டல சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.