மும்பை: கடந்த சில மாதங்களுக்கு முன் கொல்கத்தாவில் வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியை பகலிரவு டெஸ்ட் போட்டியாக இந்தியா ஆடியது. இதையடுத்து ஆஸ்திரேலிய டெஸ்ட் அணி கேப்டன் டிம் பெய்ன், ஆஸ்திரேலியாவில் பகலிரவு டெஸ்ட் போட்டியில் பங்கேற்க முடியுமா? என விராட் கோஹ்லிக்கு சவால் விடுத்திருந்தார். இதற்கு இந்திய கேப்டன் விராட் கோஹ்லி, ‘நிச்சயம் உலகின் எந்த மைதானத்திலும் இந்திய அணி பகலிரவு டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும்’ என பதிலடி கொடுத்தார். சவால் நிறைவேறும் வகையில் இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் தொடரில் பங்கேற்கவுள்ளது. அப்போது, இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஒரு போட்டி பகலிரவு டெஸ்ட் போட்டியாக நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.