டெல்லி: கொரனோ வைரஸ் தாக்குதலில் பாதிக்கப்பட்டுள்ள சீனாவிற்கு உதவிட மருத்துவ உபகரணங்கள் இந்தியா சார்பில் விமானம் மூலம் கொண்டு செல்லப்பட உள்ளன என இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. விமானம் இந்தியா திரும்பும் போது விருப்பமுள்ளவர்கள் நாடு திரும்பி வரலாம் என தெரிவித்துள்ளது. பெய்ஜிங்கில் உள்ள தூதரகம் அறிவித்த அவசர தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.