புதுடெல்லி: தொடக்கப்பள்ளிகளில் 50 விழுக்காடு தலைமை ஆசிரியர் பணியிடங்களை நேரடியாக அரசே நியமிக்கலாம் என மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் பணிமூப்பின் அடிப்படையில் தலைமை ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுகிறார்கள். இதனால் தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில் தலைமை ஆசிரியர் இல்லாத சூழ்நிலை நிலவுகிறது. இதனை சரிசெய்யும் விதமாக 50 விழுக்காடு பள்ளிகளில் இனி தலைமை ஆசிரியர்களை நேரடியாக நியமனம் செய்து கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்திருக்கிறது. இதனை தொடர்ந்து, இது நீண்ட காலமாக பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்கு எதிரானது என தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் சங்கம் தெரிவித்திருக்கிறது.