சென்னை : குழந்தை கடத்தல் புகாரில் சிக்கி வெளிநாட்டில் தலைமறைவாகிவிட்ட சாமியார் நித்தியானந்தா, தம்மை விரட்டி அடித்ததால் தமிழ்நாடே பெரும் ஆபத்தே எதிர்நோக்கி இருப்பதாக கூறினார். உலகின் ஏதோ ஒரு இடத்தில் தலைமறைவு வாழ்க்கை வாழந்து வரும் நித்தியானந்தா, இணையத்தள தொலைக்காட்சி வாயிலாக நேரலையில் உரையாற்றி இருக்கிறார். மதுரை ஆதீனத்தை சுட்டிக் காட்டி இருக்கும் அவர், தாம் தமிழ்நாட்டை விட்டு வெளியேறியது தமிழர்களுக்கு ஆபத்து என்று குறிப்பிட்டுள்ளார். கைலாசம் என்ற பெயரில் தனி நாட்டை பிரகடனப்படுத்துவதற்கு மதுரை மீனாட்சியம்மன் தான் காரணம் என்று நித்தியானந்தா முன்பு கூறி இருந்தார்.