×

தம்மை விரட்டி அடித்ததால் தமிழ்நாட்டிற்கு பேராபத்து காத்திருக்கிறது : நித்தியானந்தா எச்சரிக்கை

சென்னை : குழந்தை கடத்தல் புகாரில் சிக்கி வெளிநாட்டில் தலைமறைவாகிவிட்ட சாமியார் நித்தியானந்தா, தம்மை விரட்டி அடித்ததால் தமிழ்நாடே பெரும் ஆபத்தே எதிர்நோக்கி இருப்பதாக கூறினார். உலகின் ஏதோ ஒரு இடத்தில் தலைமறைவு வாழ்க்கை வாழந்து வரும் நித்தியானந்தா, இணையத்தள தொலைக்காட்சி வாயிலாக நேரலையில் உரையாற்றி இருக்கிறார். மதுரை ஆதீனத்தை சுட்டிக் காட்டி இருக்கும் அவர், தாம் தமிழ்நாட்டை விட்டு வெளியேறியது தமிழர்களுக்கு ஆபத்து என்று குறிப்பிட்டுள்ளார். கைலாசம் என்ற பெயரில் தனி நாட்டை பிரகடனப்படுத்துவதற்கு மதுரை மீனாட்சியம்மன் தான் காரணம் என்று நித்தியானந்தா முன்பு கூறி இருந்தார்.

ஆனால் தனி நாட்டை பிரகடனப்படுத்துவதற்கு தற்போது சொக்கநாதரை முன்னிறுத்தி இருக்கிறார். திருவிளையாடல் படத்தை நினைவூட்டிய அவர், சொக்கா, சொக்கா என்று உருகி உள்ளார். குழந்தை கடத்தல், பாலியல் அத்துமீறல் உள்ளிட்ட பல வழக்குகள் வரிசைக் கட்டி நிற்க, நாட்டை விட்டு வெளியேறிய நித்தியானந்தா, ஈக்வேடார் சென்ற பின்னர் தலைமறைவாகி விட்டார். இந்தியாவில் தேடப்படும் நபரான நித்தியானந்தா, ஒரு தீவை விலைக்கு வாங்கி கைலாஸா என்று பெயர் சூட்டி தம்மையே அதற்கு அதிபராகவும் அறிவித்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


Tags : Tamil Nadu ,Nithyananda , Child Abduction, Nithyananda, Kailasa, Ecuador, Sexual Transgression, Meenakshiman
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...