சென்னை: சிவ ராத்திரியை முன்னிட்டு நாளை 18ம் தேதி முதல் 12 ஜோதி லிங்கம், அமர்நாத் பணி லிங்கம் ஆகியவற்றை ஒரே இடத்தில் தரிசனம் செய்ய பிரம்மா குமாரிகள் இயக்கம் ஏற்பாடு செய்துள்ளது. இதுகுறித்து பிரம்மா குமாரிகள் இயக்க தமிழக மண்டல சேவை ஒருங்கிணைப்பாளர் பி.கு.பீனா கூறியதாவது: பிரம்மா குமாரிகள் இயக்க 84வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டு சிவராத்திரி தினத்தை சேர்த்து கொண்டாட திட்டமிட்டுள்ளது. சிவ ராத்திரி என்பது சிவ ஜெயந்தி என்பதால் பாரதத்தின் புகழ்மிக்க 12 ஜோதிர் லிங்கங்களையும், அமர்நாத்தில் உள்ள பனி லிங்கத்தையும் ஒரே இடத்தில் மக்கள் தரிசிக்க சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சிவ ராத்திரியை முன்னிட்டு ஐசிஎப்பில் நாளை முதல் 12 ஜோதி லிங்கம் அமர்நாத் பனி லிங்கம் தரிசனம்: பிரம்மா குமாரிகள் இயக்கம் ஏற்பாடு
- ஜோதிர் லிங்கம் அமர்நாத் ஐஸ் லிங்கம் தரிசனம்: ஐ.சி.சி பிரம்மா குமாரிஸ் இயக்கம்
- ஐசிஎப்
- சிவ ராத்ரி பிரம்ம குமாரிஸ் இயக்கம்