சென்னை: வாங்கிய ஒரு வாரத்தில் பழுதான பிரிட்ஜ் நிறுவனத்துக்கு 1 லட்சத்து 42 ஆயிரம் அபராதம் விதித்து சென்னை நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை, கீழ்ப்பாக்கத்தை சேர்ந்தவர் சாந்தி மோகன். இவர் கடந்த 2017ம் ஆண்டு ₹97,350 கொடுத்து கீழ்ப்பாக்கத்தில் உள்ள எலக்ட்ரானிக் கடையில் பிரிட்ஜ் வாங்கியுள்ளார். வாங்கிய ஒரு வாரத்தில் உள்ளே இருந்து துர்நாற்றம் வந்துள்ளது. மேலும், சில நாட்களில் நூற்றுக்கும் மேற்பட்ட பூச்சிகள் உள்ளே இருந்து வெளியே வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த சாந்தி, பிரிட்ஜ் நிறுவனத்தின் சர்வீஸ் சென்டரில் புகார் தெரிவித்துள்ளார். தொடர்ந்து அவர்களும் புதிய பிரிட்ஜ் மாற்றி தருவதாக உறுதியளித்துள்ளனர். இருந்தும் 2 மாதங்களாகியும் யாரும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்துள்ளனர்.
பின்னர், பிரிட்ஜை சோதனை செய்ய வந்தவர், அதனை பழுது பார்ப்பதாக கூறி, அதில் உள்ள பாகங்களை உடைத்துள்ளார்.