புழல்: புழல், திருவள்ளுவர் 2வது தெருவை சேர்ந்தவர் மணி (55). பால் வியாபாரம் செய்து வந்தார். குடிப்பழக்கம் உடையவர். இவருக்கு மனைவி நிர்மலா, மகன் மதன்குமார், மகள் சங்கீதா ஆகியோர் உள்ளனர். இந்நிலையில், இவர் கடந்த 2 நாட்களுக்கு முன் பால் வியாபாரத்துக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை.இதனால், அவரது மகன் மதன்குமார் மற்றும் குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதற்கிடையே கதிர்வேடு பகுதியில் செம்பியம்-செங்குன்றம் சாலையில் ஒரு தனியார் வீட்டுமனைகளுக்கும் சாலைக்கும் இடையிலான இரும்பு தடுப்பு பகுதியில் மணி இறந்து கிடப்பதாக மதன்குமாருக்கு தகவல் கிடைத்தது.