டாஸ்மாக் பாரில் பதுக்கிய மது பாட்டில்கள் பறிமுதல்

சென்னை:  திருவள்ளூர் அருகே காக்களூர் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் உள்ள டாஸ்மாக் பாரில்  24 மணி நேரமும் மது விற்பனை நடைபெறுவதாக மதுவிலக்கு அமல்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில், டிஎஸ்.பி. கல்பனாதத், ஆய்வாளர் சத்தியவாணி தலைமையிலான மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார் நேற்று முன்தினம் சோதனை நடத்தினர். அப்போது காக்களூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் உள்ள டாஸ்மாக் பாரில் 16 அட்டை பெட்டிகளில் பதுக்கி வைத்திருந்த பீர் பாட்டில்களை பறிமுதல் செய்து, விற்பனை செய்த ராமகிருஷ்ணன் என்பவரை கைது செய்தனர். இது சம்பந்தமாக பார் உரிமையாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Related Stories: