புதுடெல்லி: டெல்லி காவல்துறையின் 73வது நிறுவன நாள் விழா டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதாவது: சட்டத்தை மீறுபவர்கள் மீது ஆத்திரமும், கோபமும் ஏற்பட்டால் கூட, அவற்றை ஒதுக்கி வைத்து விட்டு பொறுமையுடன், அதே நேரம் இரும்பு கரம் கொண்டும் போலீசார் ஒடுக்க வேண்டும் என்று நாட்டின் முதல் உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் படேல் கூறியதைப் பின்பற்றி, டெல்லி போலீசாரும் நடந்து கொள்ள வேண்டும். டெல்லி நகரின் பாதுகாப்புத் திட்டங்களுக்காக மத்திய அரசு ரூ.857 கோடி நிதி ஒதுக்கி உள்ளது.