லக்னோ: சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 5 பேர் பலியான நிலையில், பாதிக்கப்பட்டோர் தரப்பில் 28 மீரட் போலீசாருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் நகரில், கடந்த டிச.20ம் தேதி குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடந்தது. அப்போது ஏற்பட்ட வன்முறையை தொடர்ந்து, போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ஐந்து பேர் பலியாகினர். அதைத்தொடர்ந்து மீரட், கான்பூர், பிஜ்னோர், லக்னோ, பிரோசாபாத் மற்றும் பிற இடங்களில் நடந்த போராட்டம் மற்றும் வன்முறையால் நடந்த துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 23 பேர் கொல்லப்பட்டனர்.