புதுடெல்லி: பீகார் மாநிலத்துக்கு இந்தாண்டு அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அங்குள்ள அரசியல் கட்சிகள் தேர்தலைச் சந்திக்கத் தயாராகிக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில், இம்முறை வேலையின்மையை முக்கியப் பிரச்னையாக கையிலெடுக்க எதிர்க்கட்சியான ராஷ்டிரிய ஜனதா தளம் முடிவெடுத்துள்ளது. இதனால் பாட்னாவில் வரும் 23ம் தேதி மாபெரும் வேலையின்மை நடைபயணப் பேரணியை நடத்த அக்கட்சித் திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், பாட்னாவில் நேற்று நடந்த கட்சிக் கூட்டத்தில் பங்கேற்ற ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் மூத்த தலைவர் தேஜஸ்வி யாதவ் பேசியதாவது: பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரித்தாளும் சூழ்ச்சியை முறியடிக்க, எதிர்க்கட்சிகளின் வலிமைமிக்க, ஒருங்கிணைந்த மகா கூட்டணி உருவாகிறது.