சென்னை: அண்ணா அறிவாலயத்தில், திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் பாஜவினர் 150 பேர் திமுகவில் இணைந்தனர். சென்னை அண்ணா அறிவாலயத்தில், நேற்று காலை நாமக்கல் கிழக்கு மாவட்டம், தமிழ்நாடு சோழிய வேளாளர் முன்னேற்றச் சங்கத்தின் நிறுவனத் தலைவரும், பாஜ மாநில அமைப்பு சாரா தொழிலாளர் பிரிவு முன்னாள் தலைவருமான என்.கே.எஸ். சக்திவேல் தலைமையில் 150 பேர் மற்றும் நாமக்கல் நகரத்தைச் சேர்ந்த டாக்டர் என்.தீபக்குமார் ஆகியோர் திமுகவில் இணைந்தனர்.