பீஜிங்: சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் பலியானவர்களின் எண்ணிக்கை, 1660 ஆக அதிகரித்துள்ளது. சீனாவின் ஹுபெய் மாகாண தலைநகர் வுகானில் இருந்து கடந்த டிசம்பர் மாத இறுதியில் பரவிய கொரோனா வைரஸ் தற்போது நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இதனால் நாளுக்கு நாள் உயிரிழப்புகளும் அதிகரித்து கொண்டே வருகின்றன. இந்நிலையில், நேற்று ஒரே நாளில் வுகான் நகரில் மட்டும், 142 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 2000 பேர் நேற்று ஒரே நாளில், கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக, சீன சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அங்கே தவித்த தங்கள் நாட்டவர் 175 பேரை, நேபாள அரசு, தனிவிமானம் மூலம் மீட்டு வந்துள்ளது. அவர்கள் அனைவரும், தலைநகர் காத்மண்டுவில், தனிமைப்படுத்தப்பட்ட நிலையில், மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்படுவார்கள் என்று நேபாள அரசு தெரிவித்துள்ளது. தற்போது, கொரோனா வைரஸ் தாக்கியதில் பலியானவர்களின் எண்ணிக்கை 1,660 ஆக உயர்ந்துள்ளதாக மாகாண சுகாதார ஆணையம் அறிவித்துள்ளது.