தூத்துக்குடி: சீனர்கள் 14 பேருடன் தூத்துக்குடி துறைமுகம் வந்த கப்பலுக்கு மத்திய அரசின் எச்சரிக்கையையும் மீறி அதிகாரிகள் அனுமதியளித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கோவிட் - 19 பாதிப்பு காரணமாக, சீனாவில் இருந்து வரும் சுற்றுலா பயணியருக்கு பல்வேறு நாடுகளில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சீனர்கள் 14 பேருடன் பனாமா சரக்கு கப்பல் ரூயி தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்திற்குள் அனுமதிக்கப்பட்டுள்ளது. சீனாவில் பரவியுள்ள கொரோனா வைரஸ் பாதிப்பு உலகத்தையே மிரளச்செய்துள்ளது. எனவே இந்தியா உள்ளிட்ட அண்டை நாடுகள் பல்வேறு தடுப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. குறிப்பாக சீனாவில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதியில்லை.